வீரராகவ பெருமாள் கோயிலில் 14-ம் தேதி பக்தர்கள் தரிசனம் ரத்து

வீரராகவ பெருமாள் கோயிலில் 14-ம் தேதி பக்தர்கள் தரிசனம் ரத்து
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமாவாசையான வரும் 14-ம் தேதி திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவ பெருமாள் கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசைக்கு முதல் நாள் இரவே வந்து தங்கி, அமாவாசையன்று கோயில் தெப்பக் குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து,வீரராகவ பெருமாளை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், வரும் 14-ம் தேதி அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூருக்கு வந்தால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் விதமாக அமாவாசையின் முதல் நாளான 13-ம் தேதி மதியம் 12 மணி முதல் அமாவாசை நாளான 14-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்தை கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது . அதுமட்டுமல்லாமல், தெப்பக் குள வாயில்களும் 13-ம் தேதி மதியம் மூடப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in