Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு ராமநாதபுரத்தில் சிறப்பு முகாம்

போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமைப் பார்வையிட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் மத்திய அரசு நிறுவனமான அலிம்கோ ஆகியவை ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களுக்கான அளவீடு மேற்கொள்வதற்கும் சிறப்பு முகாமை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறது. இச்சிறப்பு முகாமில் 14 வகையான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு அரசு எலும்பு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் மன நல மருத்துவரை கொண்டு, பயனாளிகளைத் தேர்வு செய் கின்றனர்.

அதன்படி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். இதில் 135 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். 105 பேர் பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கு.ஜோதிலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இச்சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது. டிச.11-ல் நயினார்கோவிலிலும், டிச.14-ல் பரமக்குடியிலும், டிச.15-ல் கமுதி யிலும், 16-ம் தேதி கடலாடியிலும், 17-ம் தேதி முதுகுளத்தூரிலும், 18-ல் ராமநாதபுரத்திலும், 19-ல் உச்சிப் புளியிலும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x