நெல்லையில் தமிழர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தமிழர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும், சிறையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் 15 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்க நிர்வாகி சீனிப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மதிமுக நிர்வாகி அகஸ்டின் பெர்னாண்டோ, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கலைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in