Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM
வருமான வரித் துறைக்கு தெரிந்தே தேர்தல்களில் சட்டவி ரோத பணப் புழக்கத்தின் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது என உயர் நீதி மன்ற தெரிவித்தது.
தேர்தல்களில் வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம், உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக் கல் செய்தார்.
அதில், தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா பாதிப்பால் அக்.31-ல் உயிரிழந்தார். இதையடுத்து கும்பகோணத்தில் துரைக் கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றி யதாகக் கூறப்படுகிறது. கும்ப கோணத்தில் ரூ.800 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும், இது சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அதிமுக தலை மையால் கொடுத்து வைக்கப்பட் டிருந்தாக எதிர்கட்சித் தலைவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவைத் தேர்த லின்போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அதிமுக தலை மை கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக் கணக்கான ரூபாயை பதுக்கி வைத்திருப்பது தெரிகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. எனவே, கும்பகோணத்தில் அதிமுகவினர் பதுக்கியதாகக் கூறப்படும் ரூ.800 கோடி தொடர்பாகவும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி, ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தலில் ரூ.50 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாகச் செல விடுகின்றனர்.
வருமான வரித் துறைக்கு தெரிந்தே நடைபெறுகிறது. ஒவ்வொருவரிடம் இருந்தும் மாற்றங்கள் தொடங்க வேண்டும் என்றனர்.
பின்னர் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT