3 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 262 பேர் கைது

3 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 262 பேர் கைது
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை மற்றும் பொன்னமராவதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 262 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராட் டம் நடத்தி வரும் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து ஆலங்குடியில் இந்திய கம் யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒன் றிய செயலாளர்கள் ஆர்.சொர் ணக்குமார், எல்.வடிவேல், பாஸ்கரன் ஆகியோர் தலைமை யில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, போராட்டத் தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் மு.மாதவன் உட்பட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, பொன்னமரா வதியில் 46 பேர், கந்தர்வக்கோட் டையில் 96பேர் என மொத்தம் 73 பெண்கள் உட்பட 262 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in