Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவன முதல்வர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ‘‘தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் நேற்று வெளி யாகியுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அந்தந்த பயிற்சி நிறுவனத்தில் முடிவுகள் வெளியிடப்படும். தனித்தேர்வர் கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவின் மறு கூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x