குறைந்த அளவு பக்தர்கள் பங்கேற்புடன் ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

குறைந்த அளவு பக்தர்களுடன், ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
குறைந்த அளவு பக்தர்களுடன், ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
Updated on
1 min read

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்களில் குண்டம்,தேர்த்திருவிழா கடந்த 24-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

26-ம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று காலை நடந்தது. கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்.

தொடர்ந்து, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சில அடி தூரம் தேர் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் காரண மாக, பக்தர்கள் குண்டம் மற்றும் தேர் வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கவில்லை. ஆனால், நிகழ்ச்சி முடிந்து அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in