விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தரைப்பாலங்களை மூழ்கடித்த வெள்ளம் பாதிப்பை ஆட்சியர் ஆய்வு

அகரம் சித்தாமூர்  கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
அகரம் சித்தாமூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தரை பாலங்கள் மூழ்கியுள்ளன.

விழுப்புரம் அருகே அகரம் சித்தாமூர் கிராமத்தில் ஓடும் பம்பை ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தில் தொடர் மழை காரணமாக அதிக அளவு மழைநீர் செல்வதையொட்டி உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கும், பையூர்- கொங்கராயனூர் இடையே செல்லும் தென்பெண் ணையாற்றில் உயர்மட்டப்பாலம் அமைப் பதற்கும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் திட்ட மதிப்பீடு வழங்குமாறு ஆட்சியர் அண்ணாதுரை நேற்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து திருவெண் ணெய் நல்லூர் அருகே ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் மக்கள் சென்று வர சாலை வசதிகளை விரைவாக ஏற்படுத்திட சம்மந்தப்பட்ட துறைஅலுவலர்களிடம் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஜெயசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in