Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதலான 51 வாகனங்கள் ரூ.21.31 லட்சத்துக்கு ஏலம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 41 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் நேற்று ஈரோடு புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலத்தில் விடப்பட்டன.

இதில், இருசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.4 ஆயிரம் என முன்பணம் செலுத்திய 200 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஏலத்தை தொடங்கி வைத்தார். கூடுதல் எஸ்பி பொன் கார்த்திக், டிஎஸ்பி சண்முகம் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில், 41 இருசக்கர வாகனங்கள் ரூ.7 லட்சத்து 41 ஆயிரத்து 131-க்கும், 10 நான்கு சக்கர வாகனங்கள் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்து 820 என 51 வாகனங்கள் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 951 மதிப்பில் ஏலம் விடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x