

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போரா டும் விவசாயிகளுக்கு ஆதரவ ளிக்கும் வகையிலும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த் துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமது அலி தலைமை வகித் தார். விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் அயிலை சிவசூரியன், நிர்வாகிகள் பாண்டி யன், வினோத்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தின்போது பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மை களை விவசாயிகள் எரித்தனர். இதேபோல, திருவெறும்பூர், நெ.1. டோல்கேட், உப்பிலியபுரம், மணப்பாறை, வளநாடு கைகாட்டி ஆகிய இடங்களிலும் போராட் டம் நடைபெற்றது. இப்போராட் டங்களில் பங்கேற்ற விவசாயிகள் 153 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந் தசாமி, சிஐடியு அன்பு உள்ளிட்டோர், பிரதமர் மோடியின் படங்களையும், உருவபொம்மையையும் எரித் தனர். அப்போது, போலீஸார் தடுத் ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, 20 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க் சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன் ஆகியோர் தலைமையிலும், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் மார்க் சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, செங்கிப்பட்டியில் 30 பேரும், அம்மாபேட்டையில் 35 பேரும், ஒரத்தநாட்டில் 30 பேரும், திருக்காட்டுப்பள்ளியில் 35 பேரும், வல்லத்தில் 11 பேரும், திருவையாறில் 34 பேரும், திருவோணத்தில் 34 பேரும் பிரதமரின் படம், உருவபொம் மையை எரித்து, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு, கைதாகினர். மேலும் பாபநாசம், திருவிடைமருதூர், மதுக்கூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
அரியலூர் மாவட்டத்தில்...
நாகை மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில்...