Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

இளைஞர் மரணத்தில்சந்தேகம்: மீண்டும்உடல் பரிசோதனை

கள்ளக்குறிச்சி

வடக்கனந்தல் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவர், 25-ம் தேதி உயிரிழந்ததாக குடும்பத்தாருக்கு தகவல் வர, கொடுமுடி கிராமம் சென்றுஉடலைப் பெற்று, அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் தன் கணவரை சிலர் தாக்கியதால் இறந்தார் என பாஸ்கரின் மனைவி மகாலட்சுமி, சுச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சடலம் புதைக்கப்பட்ட ஆற்றின்கரையோரத்தில், சடலத்தை நேற்று போலீஸார் தோண்டி யெடுத்தனர். சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x