Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

பைக்கில் சென்றவர்களை தாக்கிய ரவுடி கைது

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் மேலக்குயில்குடியில் நேற்று முன்தினம் துக்க வீட்டுக்குச் சென்றார். பின்னர் கீழக்குயில்குடி டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த உறவினர் ஒருவரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் சென்றவர்களை ஒதுங்கிச் செல்லும் வகையில் முருகன் ஹாரன் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊத்துமலையைச் சேர்ந்த ரவுடி காளிமுத்து(28), அவரது நண்பர்கள் பிரகாஷ், மலைச்சாமி(28) ஆகியோர் அவரை கட்டையால் தாக்கினர். இதில் முருகன் காயம் அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், ரவுடி காளிமுத்து, மலைச்சாமி ஆகியோரை நாகமலை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்தனர். பிரகாஷை தேடி வருகின்றனர். காளிமுத்து மீது கொலை, வழிப்பறி உட்பட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x