Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்காக மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் நேற்று அந்த அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், முகம்மது சித்திக், மண்டலத் தலைவர் அமீர் பாஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டி பிஐ கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் ஹசன், வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் ஜமால் முகம்மது, மஜக மாவட்டப் பொறுப்பாளர் மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x