Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

முதல்வர் நாளை சிவகங்கை வருகை எதிரொலி மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை

சிவகங்கைக்கு முதல்வர் பழனி சாமியின் வருகையையொட்டி டிச.4-ல் அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.11-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஓரிடத்திலும் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் உள்ளன. இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊரா ட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர்.

இதனால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனாவால் மேலும் 6 மாதங்கள் தேர்தல் தள்ளிப்போனது.

இதற்கிடையே, திமுக மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், டிச.4-ல் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், டிச.4-ல் கரோனா தடுப்புப் பணியை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி சிவகங்கை வருகிறார். ஒரே நாளில் முதல்வர் வருகை, மாவட்ட ஊராட்சித் தேர்தலால் அதிகாரிகள் குழப்பத்தில் இருந் தனர்.

மேலும் தேர்தலன்று முதல்வர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x