Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளி கட்டிடம் சேதம்

ராமநாதபுரம் அருகே பலத்த காற்று வீசியதால் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

ராமநாதபுரம் அருகே முத்துப் பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள் ளது. இப்பள்ளியின் ஓட்டு மேற் கூரையானது திடீரென காற்றின் வேகத்தில் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு இடிபாடுகளை அக ற்ற உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது: தனியார் பள்ளியின் பயன்படாத கட்டிடத்தின் ஓடுகளால் ஆன மேற்கூரை இடிந்துள்ளது.

புரெவி புயலைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தனு ஷ்கோடி, வேர்க்கோடு, பாம்பன் உள்ளிட்ட தொடக்கப் பள்ளிகளின் ஆவணங்கள் அனைத்தும் வேறு பள்ளிக்கு இடமாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளின் ஆவணங்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x