டாஸ்மாக் கடை  2-ம் நாளாக மூடல்

டாஸ்மாக் கடை 2-ம் நாளாக மூடல்

Published on

ஈரோடு கருங்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் செயல்படும் இக்கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். டாஸ்மாக் கடை இங்கு செயல்படுவதால், குற்றச்செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஒரு கொலைச்சம்பவம் நடந்ததையடுத்து நேற்று முன் தினம் இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், இந்த கடையை அகற்ற வலியுறுத்தி, தமிழர் கழகம் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபுதேவா தலைமையில், நிர்வாகிகள் டாஸ்மாக் கடை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானம் வாங்க காத்திருந்தோர், உடனடியாக டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். கருங்கல்பாளையம் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்

படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து உரிய அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இப்பிரச்சினை காரணமாக இரண்டாம் நாளாக நேற்றும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in