Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

அரிசி கடத்திய 2 பேர் கைது

தென்காசி

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலசை பகுதியில் சேர்ந்தமரம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடையாலுருட்டியைச் சேர்ந்த மாடசாமி(35), ராஜா (32) ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x