Published : 03 Dec 2020 03:16 AM
Last Updated : 03 Dec 2020 03:16 AM

புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,256-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,211-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்குபெருந்தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,270-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதி தாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 680-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x