டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு, நாமக்கல், சேலத்தில் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.                  படம்: எஸ். குரு பிரசாத்
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: எஸ். குரு பிரசாத்
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கோபியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய சங்க மாவட்டசெயலாளர் முனுசாமி தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் படைவீடு பி.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோல சேலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in