Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

மருத்துவப் படிப்பில் இடம் உறுதியாகியும் இணைய வசதியின்றி கலந்தாய்வை தவறவிட்ட சிவகங்கை மாணவி

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்வியில் சேர இடம் உறுதியான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர், இணைய வசதி இல்லாததால் கலந்தாய்வை தவற விட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே குருந்தங்குளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல், சந்திரா தம்பதியின் மகள் கவுசல்யா. பழையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் பிளஸ் 2 தேர்வில் 1111 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக ஆசைப்பட்ட அவர் நீட் தேர்வு எழுதினார்.

தோல்வியடைந்ததால் மதுரை தனியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் சேர்ந்தார். இருந்தபோதிலும் தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார். இந்தாண்டு மூன்றாவது முறையாக தேர்வு எழுதிய அவர், 252 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரது குடும்பத்தாரிடம் மொபைல் போன் கூட இல்லாததால், உறவினர் ஒருவர் உதவியால் மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதைத் தனது விண்ணப்பத்தில் கொடுத்துள்ளார். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அவருக்கு பொதுப் பிரிவில் 145-வது இடமும், பிற்பட்டோர் பிரிவில் 46-வது இடமும் கிடைத்துள்ளது. மேலும் அவரை நவ.18-ம் தேதி கலந்தாய்வுக்கு அழைத்துள்ளனர். இத்தகவலை மருத்துவ கல்லூரி இயக்குந ரகம் மாணவியின் மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்பியது. இணைய வசதி இல்லாததால் இந்த தகவலை கவுசல்யா கவனிக்கவில்லை. இந்நிலையில் அவரை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சிலருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இதை அறிந்த பிறகே, கவுசல்யா தனது மின்னஞ்சல் முகவரியைப் பார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அழைப்புக் கடிதம் வந்துள்ளது தெரிய வந்தது.

படிப்பறிவு இல்லாத பெற்றோராலும், இணைய வசதி இல்லாததாலும் மருத் துவப் படிப்பில் இடம் உறுதியாகியும் கலந்தாய்வைத் தவறவிட்ட ஏழை மாண விக்கு தமிழக அரசு உதவிசெய்ய வேண்டு மெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x