பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.  			            படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: மு.லெட்சுமி அருண்

நெல்லையில் மார்க்சிஸ்ட் மறியல்

Published on

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாளையங்கோட்டையில் இந்தியன் வங்கி கிளை அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ், தாலுகா செயலாளர் வரகுணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி கோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in