மீனாட்சிபுரத்தில் மரத்தில் தீ: ரயில்கள் தாமதம்

மீனாட்சிபுரத்தில் மரத்தில் தீ: ரயில்கள் தாமதம்
Updated on
1 min read

மீனாட்சிபுரத்தில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி இருக்கும் வீட்டில் நின்ற மரம் நேற்று மாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தெரியவந்ததும் திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் செங்குளம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தபின், அங்கிருந்து ரயில் புறப்பட்டு திருநெல்வேலிக்கு வந்தது. இரவு 7.10 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து கிளம்ப வேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 1.30 மணிநேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in