Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதம்

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. 3-வது முறையாக ஆட்சி தொடர தொண் டர்கள், நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட, நகர, ஒன் றிய, பேரூர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம்கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியது:

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு மீது மக்களுக்கு நல்ல எண்ணங்கள் அதிகரித்துள்ளது. அதி முக ஆட்சி மீது மக்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சிதொடர தொண்டர்கள், நிர்வாகிகள் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். திமுகவினர் பதவி வெறிப் பிடித்தவர்கள். தங்களுடைய குடும்பம் மலர உழைக்கும் கட்சி திமுக.காவல்துறை உயர் அதிகாரிக ளையே மிரட்டும் கட்சி திமுக என்பதற்கு உதாரணம் தான், உதய நிதி ஸ்டாலின் தமிழக காவல்துறை தலைவரை மிரட்டியது.திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் நிலவியது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது.

உழைப்புக்கு தேடி அங்கீகாரம் கொடுக்கிற கட்சி அதிமுக. ஆனால்திமுகவில் உழைப்புக்கு மரியாதைஇல்லை. திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறனுக்கு காவடி தூக்க வேண்டும். காலை பிடித்தால் தான் அக் கட்சியில் பதவி கிடைக்கும் சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.

உழைப்புக்கு தேடி அங்கீகாரம் கொடுக்கிற கட்சி அதிமுக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x