Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

செஞ்சி கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற பாஜகவினர் கைது

கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி செஞ்சி கோட்டையில் தீபம் ஏற்றஅனுமதிக் கோரி பாஜக மாவட்டமுன்னாள் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ரங்கன் தலைமையில் சுமார் 50 பேர்செஞ்சிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். கரோனா பொதுமுடக் கம் அமலில் இருப்பதால் கோயிலுக்குள் அனுமதி அளிக்க முடியாது என போலீஸார் கூறியுள்ளனர்.

அனுமதி கேட்டு காவல் நிலை யத்திற்கு வந்த மரக்காணம் ஒன்றியபாஜக பொதுச்செயலாளர் மணி வண்ணன், ஒன்றிய பொருளாளர் காத்தவராயன் உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்து அங் குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதையறிந்த விழுப்புரம் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராஜேந்திரன், திருமணமண்டபத்திற்கு நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை யில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x