உறவினர் பெண்ணுடன்தொழிலாளி தற்கொலை

உறவினர் பெண்ணுடன்தொழிலாளி தற்கொலை
Updated on
1 min read

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் (38). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது உறவினர் பெண் கலையரசி (30) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர்.

இதில் மனமுடைந்த இருவரும் நேற்று அந்தியூர் அருகே ஜெஜெ நகரில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த அந்தியூர் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இரு உடல்களையும் மீட்டனர்.

இதுதொடர்பாக அந்தியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in