தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க  உறுப்பினர்களுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி
Updated on
1 min read

பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கேசரிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உறுப்பினர்களுக்கு மத்தியக் கால கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று 75 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மத்திய கால கடன்களை வழங்கினார்.

இதுபோல் மாணிக்கம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.17.40 லட்சம் மதிப்பில் மத்திய கால கடன், ரூ.5.72 லட்சம் மதிப்பில் பங்கு ஈவு தொகையும் அமைச்சர் வழங்கினார்.

ஒலகடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 33 பயனாளிகளுக்கு ரூ.28.71 லட்சம் மதிப்பில் மத்திய கால கடன், 17 பயனாளிகளுக்கு ரூ.15.45 லட்சம் மதிப்பில் பயிர்கடன் என மொத்தம் 145 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in