Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

சிறுமியை கிண்டல் செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

பெரம்பலூர் அருகே சிறுமியை கிண்டல் செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் திரிசங்கு மகன் சங்கர் (19), செல்வராஜ் மகன் பிரதீப்ராஜ்(19), பரமசிவம் மகன் கருப்பையா(20). இவர்கள் 3 பேரும் கடந்த 9.9.2018 அன்று அப்பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறி வாங்க வந்த 13 வயது சிறுமியை ஆபாசமாக கேலி செய்து துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கர், பிரதீப்ராஜ், கருப்பையா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x