Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

குமாரபாளையம் நகராட்சியில் புயல் கட்டுப்பாட்டு மையம் தயார்

இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் அளிக்க குமார பாளையம் நகராட்சியில் கட்டுபாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது, என நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு தெரிவித்து ள்ளளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

‘நிவர்’ புயலின் தாக்கம் நாளை வரை இருக்குமென அரசு அறிவித்துள்ளது. எனவே குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் 04288 - 261733 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுபாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x