Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

காணொலி வாயிலாக நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி/ கரூர்

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை(நவ.27) காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இதில், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்கலாம்.

இக்கூட்டத்தில் நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள், விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டுமே தெரிவிக்க வேண்டும். கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த காணொலிக் காட்சி குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதேபோல, கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை(நவ.27) காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x