2 பெண் குழந்தைகளைகொன்று தாய் தற்கொலை?

2 பெண் குழந்தைகளைகொன்று தாய் தற்கொலை?
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் மில்லத் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது(35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஹமத் நிஷா(29). இவர்களுக்கு ஷபா(7), ஷனா(4) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ரஹ்மத் நிஷா தனது குழந்தைகளுடன் மில்லத் நகரில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தார். அதே வீட்டின் தரைத் தளத்தில் ரஹமத் நிஷாவின் மாமனார் சபியுல்லா, மாமியார் முஸ்திரி பேகம் ஆகியோர் வசித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக மாமனார், மாமியாருடன் ரஹமத் நிஷா கடந்த சில மாதங் களாக பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஹமத் நிஷாவின் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு துர்நாற்றம் வீசியது. இதையறிந்த, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.களத்தூர் காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்குச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரஹமத் நிஷாவின் சடலம் தூக்கில் தொங்கியது. குழந்தைகள் இருவரின் சடலங்களும் படுக்கை யில் கிடந்தன.

குழந்தைகளைக் கொன்று விட்டு ரஹமத் நிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பே இவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in