கோமுகி அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

கோமுகி அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் அணைக் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 560.96 மில்லியன் கனஅடி. இந்தஅணையிலிருந்து வெளியேற்றப் படும் தண்ணீர் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலம், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய மக்கள் பயனடைந்து வருகின்றனர். கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிரா யபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணை கள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்து வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தற்போது 'நிவர்' புயல் காரணமாகவும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக அணைக்கான நீர் வரத்து 300 கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் 44 அடியாகவும், மொத்த நீர் பிடிப்பு 489.56மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. அணையில் 44 அடி தண்ணீர் தேக்கப்படுவதால், அணையின் பாதுகாப்புக் கருதி, வரத்து தண்ணீர் அப்படியே பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in