தேர்தலில் தவறை தடுக்க விழிப்புடன் பணி திமுக வழக்கறிஞர்களுக்கு எம்.பி. அறிவுறுத்தல்

தேர்தலில் தவறை தடுக்க விழிப்புடன் பணி திமுக வழக்கறிஞர்களுக்கு எம்.பி. அறிவுறுத்தல்
Updated on
1 min read

வாக்குச்சாவடிகளில் நடக்கும் தவறுகளைத் தடுப்பதில் திமுக வழக்கறிஞர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திமுக எம்பி என்.ஆர். இளங்கோ பேசினார்.

மதுரையில் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மதுரை மாநகர், புறநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன், பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

திமுக.வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ பேசி யதாவது: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பறிக்க பல்வேறு வழிகளில் ஆளும் கட்சியினர் முயற்சிக்கலாம். இதைத் தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு திமுக வழக்கறிஞர்களிடம்தான் உள்ளது.

வாக்குச்சாவடிகளில் பல்வேறு தவறுகள் தெரிந்தும் தெரியாமலும் நடக்கலாம். ஒவ்வொரு தவறையும் எப்படி தடுக்க வேண்டும் என்பது வழக்கறிஞர்களுக்கு தெரிய வேண்டும். இதை வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளர்களுக்கு கற்றுத்தர வேண்டும். நமக்குத் தெரியாமல் எந்த தவறும் நடக்காமல் இருக்க விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் எழிலரசன், லிங்க துரை, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in