மேலப்பாளையத்தில் அங்கன்வாடி அமைக்க கோரி மனு

மேலப்பாளையத்தில் அங்கன்வாடி அமைக்க கோரி மனு
Updated on
1 min read

மேலப்பாளையம் பீடி தொழிலாளர் குடியிருப்போர் காலனியில் அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளி அமைக்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கோரிக்கை அனு அளிக்கப்பட்டது.

மேலப்பாளையம் நகரத் தலைவர் மூஸல்காழிம், நகரச் செயலாளர் அபுதாஹிர், எஸ்டிபிஐ பாளையங்கோட்டை தொகுதி துணைத்தலைவர் ஷரீப் ஆகியோர் மனுவை அளித்தனர். அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அப்போது ஆணையர் உறுதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in