Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

பால் உற்பத்தியாளர்களுக்கான பாக்கி ரூ.2 கோடியை மீட்டுத் தர கோரி மனு

தேனி: பாக்கித் தொகை ரூ.2 கோடியை மீட்டுத்தரக் கோரி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கின்போது ஆவின் மூலம் பால் கொள்முதல் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால், உத்தமபாளையம் அருகே புலிக்குத்தியில் உள்ள தனியார் பால் பதப்படுத்தும் மையத்துக்கு விற்பனை செய்தோம்.

தொடக்கத்தில் நாங்கள் வழங்கிய பாலுக்கு பணம் தந்தனர். அதன் பின்னர் பணம் தரவில்லை. தற்போது அந்த மையம் மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். சுமார் ரூ. 2 கோடி வரை பாக்கி உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x