Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நிறுத்திய8 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், எம்.எஸ்.பி., காலனி பகுதிகளில் வீடுகளின் முன் சாலையோரங்களில் கார்கள் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென அப்பகுதியில் நிறுத்தியிருந்த கார்களின் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டன. கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை மிரட்டிவிட்டுச் சென்றனர். எட்டு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து திண்டுக்கல் நகர், தாலுகா காவல் நிலையங்களில் காரின் உரிமையாளர்கள் தனித்தனியே புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிந்து கார் கண்ணாடியைச் சேதப்படுத்திய நபர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா இல்லாததால் நள்ளிரவில் வந்து சென்றோரைக் கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x