Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வி.எம்.விஜயசரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வளர்ப்பு பெற்றோர் முறை யில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோராக விரும்பும் குழந்தை இல்லாத தம்பதியினர் ‘மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு, 21-22, கென்னட் நகர், முத்துப்பட்டி, மதுரை’ என்ற முகவரியில் இலவசமாக விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 97895 15915 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT