டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

நாமக்கல் அருகே வேலகவுண்டம் பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் ராமலிங்கம் என்பவர் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இரவு இவரை தாக்கிய மர்ம நபர்கள் கடையில் இருந்து ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக வேலகவுண்டம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் உள்பட இருவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆகாஷ் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி ஆட்சியருக்கு, மாவட்ட காவல் துறையினர் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி ஆகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்கான நகல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆகாஷிடம் காவல் துறையினர் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in