பெரம்பலூர் அருகே விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தைச் தேர்ந்தவர்கள் ஜெ.அரவிந்த்(24), ஏ.அரவிந்த் (23), எம்.முத்துக்குமார் (18). இவர்கள் மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் லப்பை குடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது, திருமாந்துறை நோவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரஞ்சித்குமார்(24) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஏ.அரவிந்த் உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரஞ்சித்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து மங்களமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in