Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

லாரியில் இருந்து கீழே விழுந்த ரூ.1 லட்சம் மதுபானம் சேதம்

சென்னையில் இருந்து கோவை மாவட்டத்துக்கு மதுபானங்கள் ஏற்றிய லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் - சேலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஊத்தங்கரை அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு, லாரியின் பின்பகுதியில் கட்டப்பட்டிருந்த கயிறு கழன்று விழுந்தது. இதில் லாரியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மதுபான பெட்டிகள் சாலையில் விழுந்தன. அவற்றில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. உடையாத மதுபாட்டில்களை அங்கிருந்தவர்கள் எடுத்துச் சென்றனர். தகவலறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸார் உடையாமல் இருந்த மதுபான பாட்டில்களை மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x