Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி

நடப்புக் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 21 முதல் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ரூ.50 தேர்வுக் கட்டணத் தொகை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் நவ.30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு நாள் அன்று தேர்வர்கள் தேர்வுக்கு வரும்போது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x