Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் கவிபுரம் கிராமத்தில் வனவிலங் குகளை வேட்டையாடும் நோக்கத்துடன், சிலர் மின்கம்பியில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து தோட்டத்தில் உள்ள மரக்கொம்புகளில் கம்பி கட்டி அதில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர்.
இதில் சுமார் 38 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) வெங்கடேசப்பா (60) கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா (40) தலைமறைவாக இருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகில் ஒசகோட்டா என்ற இடத்தில் நாராயணப்பாவை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT