Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

சந்தன மரம் வெட்டிய இருவர் கைது

அரூர் அருகே சந்தன மரம் வெட்டிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச் சரகர் சிவகுமார் தலைமையிலான வனத்துறையினர் அரூர் பகுதியில் அதிகாலையில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அரூர் பொதுப்பணித் துறை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறையைச் சேர்ந்த கோவிந்தன்(26), முனியப்பன்(22) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர் இருவரையும் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் வழிகாட்டுதல்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

அவர்களிடம் இருந்து 1 இருசக்கர வாகனம், 165 கிலோ எடை கொண்ட சந்தன மரத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3.30 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x