Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

திமுக மாவட்டச் செயலாளரை கண்டித்து லால்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுகவின் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லால்குடியில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை இழி வாக பேசி சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்த திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமை வகித்து பேசும்போது, ‘‘பெண்களை இழிவாக பேசிய திமுக மாவட்டச் செயலாளர் மீது அக்கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்ட வேண்டும்’’ என்றார்.

இதில் முன்னாள் எம்எல்ஏக் கள் எஸ்.எம்.பாலன், சி.சின்னச் சாமி, தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பர்வீன் கனி, பொரு ளாளர் இளங்கோ, இணைச் செயலாளர் ரீனா செந்தில், துணைச் செயலாளர்கள் ராஜ் மோகன், சாந்தி, ஒன்றியச் செயலாளர்கள் சூப்பர் நடேசன், அசோகன், ராஜாராம், சிவக்குமார், ராவணன், கும் பக்குடி கோவிந்தராஜ், சேது, பழனிசாமி, வெங்கடாச்சலம், பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x