Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

வேலூர்: வேலூர் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அருகேயுள்ள கம்மவான்பேட்டை மேட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி குணாதேவி (35). சுப்பிரமணி தனது இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் கம்மவான்பேட்டை கூட்ரோடு அருகே நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், திடீரென குணாதேவி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x