Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்கலமகாதேவி கிராமத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி பரசுராமன்(48). இவர், அதே கிராமத்தில் கணவனை இழந்து வசித்து வரும் 40 வயது பெண்ணை, கடந்த 2015-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பரசுராமனை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பரசுராமனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் பரசுராமன் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x