Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

தெய்வீக தமிழக சங்கம் தொடக்க விழா

தமிழகத்தில் ஆன்மிகத்தை வளர்க்க, தெய்வீக தமிழக சங்கம் என்ற அமைப்பு தொடக்க விழா பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் ஆர்விஎஸ் மாரிமுத்து, பொள்ளாச்சி மாவட்ட தலைவர் சி.செல்லக்குமார், கோவை மண்டல செயலாளர் சுரேஷ் பாரதி, பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஆர்விஎஸ் மாரிமுத்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, தமிழகம் அமைதிப் பூங்காவாகவும், பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலமாக இந்தியாவுக்கே வழிகாட்டியாகவும் இருந்தது. கழகங்களின் ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் தேச பக்தியும், ஆன்மிக உணர்வும் குறைந்துவிட்டன. தொழில் ரீதியான முன்னேற்றமும் இல்லை. கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் நிலை குறித்து தகவல் இல்லை. சிலை கடத்தல் தற்போது தொழிலாகவே நடைபெற்றுவருகிறது. ஆன்மிக நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் தலையிட்டு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர். கோயில் வருமானத்தை கோயில்களுக்கு செலவிடுவது இல்லை. தமிழகத்தில்தான் தெய்வீக பாடல்களை கொச்சைப்படுத்தும் நிலை உள்ளது. தமிழகத்தில் ஆன்மிகத்தை வளர்க்க, தெய்வீக தமிழக சங்கம் ஆரம்பிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு நவம்பர் 20 (நேற்று) முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வீடுதோறும் சென்று, இச்சங்கத்தின் சார்பில், ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ என்னும் புத்தகம் வழங்கப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x