Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜகவின் வேல் யாத்திரைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ‘இது ஆன்மிக யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை’ என்று விமர்சித்து தடை விதித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து வேல் யாத்திரை நடத்தப்பட்டுவருகிறது. இதை தமிழக அரசும், காவல் துறையும் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றன. 22-ம் தேதி (நாளை) கோவையில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை வேல் யாத்திரையைத் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்ப்பதால், அன்று காலை 10 மணி அளவில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை 18 அமைப்புகள் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT