Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியில்மேம்பால பணி விரைவில் தொடக்கம் மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு

கோவை

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், நெடுஞ்சாலைத் துறையினரால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. உக்கடம் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து கரும்புக்கடை வரை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல், செல்வபுரம் பைபாஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டது. முதல்கட்ட மேம்பாலப்பணிகள் முடிவடைந்ததால், ஆத்துப்பாலம் சாலையின் கீழ் பகுதியில் தற்காலிகமாக தார்ச்சாலை அமைத்து இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் செல்ல கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, மாநகர காவல் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் முத்தரசு கூறும்போது, ‘‘ஆத்துப்பாலத்தில் உள்ள சுங்க கட்டண வசூல் மைய கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி அடுத்த சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இலகு ரக வாகனங்களை செல்வபுரம் பைபாஸ் சாலையில் திருப்பி விட வாய்ப்புள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x