Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 37-வது வார்டு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், அதை சாப்பிடுவோருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பினர். இதையடுத்து, அந்த உணவகத்தில் நேற்று மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், உணவுகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், மக்களுக்கு இடையூறு வகையில் உணவு செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT