Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

திமுகவினர் சாலை மறியல் போராட்டம்

கோவை: திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரம் அண்ணா சிலை அருகே மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையிலும், தொண்டாமுத்தூரில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும், சத்தி சாலை சரவணம்பட்டியில் மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் தலைமையிலும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்கொலை முயற்சி: கோவை தெப்பக்குளம் மைதானம் பகுதியைச் சேர்ந்த சித்திரகலா(45), திமுக கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இவர், மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் போராட்டம் நடத்தினார். அவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x